» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை : பாகிஸ்தான் அரசு உத்தரவு
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:19:32 PM (IST)
ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க இந்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. தரையில் இருந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் நடவடிக்கையை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பாகிஸ்தான் போருக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த ஏவுகணை சோதனையை நடத்த முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஒருவேளை ராணுவ நடவடிக்கை எடுத்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










