» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு

ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. மேலும் 12 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனேசி, சிட்னி கடற்கரையில் இன்று நடந்த துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் நியூ சௌத் வேல்ஸ் போலீசார் வழங்கும் தகவல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து

தேச பக்தன்Dec 15, 2025 - 09:38:00 AM | Posted IP 104.2*****

இஸ்லாமிய தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு அப்படி பொருத்தமான தலைப்பு வையுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory