» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள ஒரு மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் பிரான்சிடம் இருந்து 1960-ல் சுதந்திரம் பெற்றது. எனினும் தனது ஆதரவு பெற்ற அதிபர் முகமது பாசும் மூலம் பிரான்ஸ் தொடர்ந்து மறைமுக ஆட்சி செய்து வந்தது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு அதிபர் முகமது பாசுமை பதவியில் இருந்து அகற்றி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து அண்டை நாடுகளான புர்கினோ பாசோ, மாலியிலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த நாடுகளின் எல்லையில் ஐ.எஸ்., அல்-கொய்தா பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். எனவே தங்களது பாதுகாப்பு கருதி சகேல் நாடுகள் கூட்டணி என்ற அமைப்பை அவை உருவாக்கின. அவை ரஷியாவின் உதவியுடன் எல்லை பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் மாலி, புர்கினோ பாசோ எல்லை பகுதியான கோகோரூ அருகே உள்ள மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து அங்குள்ள சந்தையில் உள்ள கடைகளையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இதில் 44 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 13 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் பொதுமக்கள் போராட்டம்!
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:49:47 PM (IST)

ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: டாக்டர் உள்பட 3 பேர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:42:50 PM (IST)

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா : குழந்தைகள் உள்பட 18 பேர் பலி
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:21:26 AM (IST)

இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அதிபர் திசநாயக்க உறுதி
சனி 5, ஏப்ரல் 2025 3:30:36 PM (IST)

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:45:48 PM (IST)

இலங்கையில் மோடி வருகையை முன்னிட்டு தெரு நாய்களைப் பிடிக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 5:31:33 PM (IST)
