» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம்: உக்ரைன் உறுதி!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:43:26 PM (IST)
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக சேர முயல்வதைக் கண்டித்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த முடிவும் எட்டப்படாமல் போர் தொடர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தினார்.
அதன்படி முதற்கட்டமாக 30 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவருவது குறித்த முன்மொழிவு வழங்கப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதித்த நிலையில் ரஷிய அதிபர் புதினும் சம்மதிப்பாக மேலோட்டமாக தெரிவித்தார். போரை நிறுத்த புதின் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட புதின் தந்திரம் செய்கிறார் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை டொனால்டு டிரம்பும், புதினும் டெலிபோனில் உரையாட உள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் நடந்துவரும் ரைசினா மாநாட்டில் இன்று கலந்துகொண்டு பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷியாவுடனான மோதலுக்கு அமைதியான தீர்வையே உக்ரைன் விரும்புகிறது, ஆனால் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்ய மாட்டோம்.
டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையேயான டெலிபோன் உரையாடலுக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த தெளிவான நிலைப்பாடு வெளிப்படும். ரஷியாவுடனான 30 நாள் போர்நிறுத்தம் குறித்த அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டது, அமைதி முயற்சியை உக்ரைன் எதிர்க்கவில்லை.
அதே நேரத்தில், உக்ரைன் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யாது. ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். உக்ரைனைத் தாக்குவதன் மூலம் ரஷ்யா எந்த மூலோபாய இலக்குகளையும் ரஷியா அடையவில்லை என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)

வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)

அமெரிக்காவில் 6 ஆயிரம் வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக அறிவிக்க டிரம்ப் முடிவு!
சனி 12, ஏப்ரல் 2025 3:50:44 PM (IST)
