» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

திங்கள் 1, ஜூலை 2024 11:42:58 AM (IST)



இலங்கை இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்  இரா. சம்பந்தன் எம்.பி. காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் இரா. சம்பந்தன் (வயது 91). இவர் இலங்கை அரசில் எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை இரா. சம்பந்தன் மேற்கொண்டார். இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இரா. சம்பந்தன் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரா. சம்பந்தன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இரா. சம்பந்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவதிற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் இரா. சம்பந்தன். சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory