» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென்கொரியாவில் அமெரிக்க போர்க்கப்பல்: வடகொரியாவை சமாளிக்க கூட்டுப்போர் பயிற்சி

ஞாயிறு 23, ஜூன் 2024 9:20:52 AM (IST)



வடகொரியாவை சமாளிக்க அமெரிக்காவுடனான கூட்டுப்போர் பயிற்சியை மீண்டும் தொடங்க தென்கொரியா முடிவு செய்துள்ளது. 

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் வடகொரிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது போர் ஏற்பட்டால் இரு நாடுகளும் பரஸ்பரம் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தம் தங்களது பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷிய தூதரை வரவழைத்து தென்கொரியா கண்டனத்தை தெரிவித்தது.

இதனையடுத்து அமெரிக்காவுடனான கூட்டுப்போர் பயிற்சியை மீண்டும் தொடங்க தென்கொரியா முடிவு செய்துள்ளது. இதற்காக அணுசக்தி மூலம் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் நேற்று தென்கொரியா சென்றடைந்தது. எனவே இந்த கூட்டுப்போர் பயிற்சியானது விரைவில் தொடங்கும் என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory