» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை-இந்தியா பாலம் ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவு: ரணில் விக்ரமசிங்க தகவல்!

திங்கள் 17, ஜூன் 2024 11:10:58 AM (IST)

இலங்கை-இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் தனுஷ்கோடி, இலங்கையின் தலைமன்னாா் இடையே கடலில் 23 கி.மீ. தொலைவுக்கு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான மன்னாரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் விரைவில் நிறைவடையும்’ என்றாா்.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றாா். இந்தச் சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் 20-ஆம் தேதி இலங்கை வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இதுவரை அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.

எஸ்.ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம் உறுதி செய்யப்பட்டால், வெளியுறவு அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பின் அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும். இப்பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மின்தொகுப்பு இணைப்புத் திட்டம் குறித்தும் தங்களிடம் மிகையாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவிடம் விற்பனை செய்வது தொடா்பாகவும் விவாதிக்கப்படும்; மன்னாரில் அதானி குழுமத்தின் காற்றாலை திட்டம், திருகோணமலையில் தொழில் மண்டலம் அமைக்கும் திட்டம் உள்பட இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தாா். தமிழகம்-இலங்கை இடையிலான பாக் நீரிணைப் பகுதி மீன்வளம் மிக்கதாகும். இங்கு எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக, இருதரப்பிலும் மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்கதையாக உள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Jun 17, 2024 - 02:08:13 PM | Posted IP 162.1*****

மதம் மாறிய புத்த மத பிச்சைக்கார இலங்கைக்காரன் பைசா கூட செலவு பண்ணமாட்டான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory