» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய சிறையில் காவலர்களை பிடித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்: சுட்டுக்கொன்று 6 பேர் மீட்பு!

திங்கள் 17, ஜூன் 2024 9:13:01 AM (IST)

ரஷியாவின் தெற்கு பிராந்தியமான ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் சிறைச்சாலை செயல்படுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் 2 கைதிகள் சிறைச்சாலையில் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறை கதவை உடைத்து வெளியேறினர். பின்னர் காவலர்கள் 6 பேரை கத்திமுனையில் பணய கைதிகளாக அவர்கள் சிறைபிடித்தனர். அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அந்த கைதிகள் 2 பேரும் சிறையில் இருந்து தாங்கள் தப்பித்துச்செல்ல வழிவகை செய்யும்படி அரசாங்கத்துக்கு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து கைதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே ராணுவ வீரர்கள் சிலர் சிறைச்சாலைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் அங்கு சென்று அந்த கைதிகளை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 கைதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த 6 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும் ராணுவத்தின் முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory