» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் 49 பெண்களை கொன்ற கொடூர கொலையாளி சிறையில் அடித்துக் கொலை!

ஞாயிறு 2, ஜூன் 2024 12:23:30 PM (IST)

கனடாவில்  49 பெண்களை கொன்ற கொடூர  கொலையாளி சிறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். 

கனடாவின் வான்கூவர் நகரில் கடந்த 1990-2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் பலர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்திய ராபர்ட் பிக்டன் (71) சட்ட விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசுக்கு புகார்கள் சென்றன.

இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்றபோது அவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு, துண்டாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது 49 பெண்களை அவர் வெட்டிக்கொன்றதும், பின்னர் அவர்களது உடலை துண்டு, துண்டாக வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இரையாக போட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் வான்கூவரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் ராபர்ட்டுக்கும், சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே கடந்த மாதம் 19-ந் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் பலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory