» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் போலீஸ்காரரை தாக்கிய இந்தியர் கைது

சனி 27, ஜனவரி 2024 8:32:29 AM (IST)

சிங்கப்பூரில் போலீஸ்காரரை தாக்கிய இந்தியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய வம்சாவளியான ஹரிதாஸ் ரியான் பீட்டர் (49) சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது காதலியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ஹரிதாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒரு போலீஸ்காரரை கால்களால் எட்டி உதைத்தார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்குள்ள சட்டத்தின்படி அரசு ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் ஹரிதாசுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

சந்திரன்Jan 28, 2024 - 04:02:18 PM | Posted IP 172.7*****

போடா ஹீய்யாலே

அதெப்படிJan 27, 2024 - 11:35:10 AM | Posted IP 172.7*****

காதலியை தாக்க மனம் வருகிறது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory