» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து... 13 மாணவர்கள் பலி!

சனி 20, ஜனவரி 2024 5:02:34 PM (IST)

சீனாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் நேற்று இரவு திடீரென்று தீப்பற்றியது. இந்த விபத்து குறித்து பள்ளி அதிகாரிகள் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் வெகு நேரம் முயற்சித்து தீயை அணைத்தனர். 

இந்த கோர தீ விபத்தில் விடுதியில் இருந்த 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory