» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலரஞ்சலி
சனி 18, நவம்பர் 2023 4:47:09 PM (IST)

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தோனேசியாவில் 10-வது ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜகர்த்தா நகருக்கு சென்றார். அவர் நேற்று முன்தினம் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், இந்தோனேசியா மற்றும் வியட்நாமின் பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்தினார்.
இதன்பின் சொந்த நாட்டுக்கு திரும்பும் வழியில், சிங்கப்பூருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார். அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், இந்திய தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய ராணுவத்தின் 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கு' என்னுடைய மனப்பூர்வ அஞ்சலியை செலுத்தினேன் என தெரிவித்து உள்ளார்.
1945-ம் ஆண்டு, 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கான' நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல்லை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டினார். இதன்பின் 1995-ம் ஆண்டில், சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் ஆனது, அதே இடத்தில் இந்திய தேசிய ராணுவத்திற்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி நினைவிடம் ஆக்கியது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, சிங்கப்பூரில் மிக பழமையான 1855-ம் ஆண்டையொட்டி எழுப்பப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










