» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளி நாடுகளின் நிலத்தை ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை: சீன அதிபர்

வெள்ளி 17, நவம்பர் 2023 12:03:56 PM (IST)

வெளி நாடுகளின் நிலத்தை ஒரு  இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சீன அதிபர்  ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார். 

சீனாவுக்கும் அண்டை நாடுகளாக இந்தியா, திபெத், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அதிகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நிகழ்வு நடந்து வருகிறது. கல்வான் பகுதியில் ஊடுருவல் நடந்தபோது இரு ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

தைவான் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சீனாவுக்கும் அந்நாட்டிற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டிற்கு இடையே அமெரிக்க- சீனா தொழில் கவுன்சில் மற்றும் அமெரிக்கா- சீனா உறவுக்கான கமிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அருகில் உள்ள நாடுகளுடன் ஒரு பதற்றமான நிலை உருவாகி இருப்பது தொழில்துறைகளில் கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜி ஜின்பிங் பதில் அளிக்கையில் "சீனா மோதல் மற்றும் போரை தூண்டவில்லை. வெளிநாட்டு நிலத்தை சிங்கிள் இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை" என்றார்.

ஜோ பைடன்- ஜி ஜின்பிங் சந்திப்பின்போது ஜோ பைடன், திபெத் மற்றும் ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து தனது கவலையை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory