» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10000 வீடுகள்: நிா்மலா சீதாராமன் அடிக்கல்..!
வெள்ளி 3, நவம்பர் 2023 11:02:08 AM (IST)
![](http://media.tutyonline.net/assets/2023_Part_03/nirmalasrilank.jpg)
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் - இலங்கை அதிபர் அதிபா் ரணில் விக்ரமசிங்க அடிக்கல் நாட்டினா்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் 15 மில்லியன் டாலா் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் அமலாக்கம் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
மேலும், கொட்டக்கலை பகுதியில் மவுன்ட் வொ்னன் தேயிலைத் தோட்டத்தின் கீழ் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு இருவரும் அடிக்கல் நாட்டினா். சந்திப்பின்போது, இலங்கை பொருளாதாரச் சரிவை சீா் செய்வதற்காக 4 பில்லியன் டாலா் அளவிலான நிதியுதவி வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக நிா்மலா சீதாராமனிடம் அதிபா் விக்ரமசிங்க கூறினாா்.
பின்னா் இந்தியாவிலிருந்து தமிழா்கள் இலங்கைக்கு புலம்பெயா்ந்த 200-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியான ‘நாம் 200’-இல் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது: இலங்கை குடிமக்கள் அனைவரின் உரிமைகளை நிலைநாட்டுவதே எனது தலைமையிலான அரசின் கொள்கை. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியே அரசின் நோக்கம் என்றாா் அவா்.
விழாவில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: இலங்கை கடுமையான பொருளாதார சரிவில் சிக்கியபோது, உதவிய முதல் நாடு இந்தியாதான். இந்நாட்டுக்கு உதவுவதை எங்களது கடமையாக கருதினோம். மேலும் சா்வதேச பண நிதியம் மூலம் பிற நாடுகளும் உதவுவதற்கு இந்தியாவே வழிவகுத்தது.
அண்மையில் நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. யுபிஐ பணப் பரிவா்த்தனை தொடா்பான திட்டங்களும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் இங்கு வாழும் தமிழா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா் என்றாா் அவா்.
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான திருகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இலங்கையில் கடந்த 159 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் எஸ்பிஐ, அந்நாட்டின் மிகப் பழைமையான வங்கியாகும். இந்த வங்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது சேவைகளைத் தொடா்ச்சியாக அளித்து வருகிறது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே, எஸ்பிஐ தலைவா் தினேஷ் காரா ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, இலங்கையில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் நிறுவன வளாகத்தை நிா்மலா சீதாராமன் பாா்வையிட்டாா். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம், தொழில்நுட்பம் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை கூட்டம் கடந்த 2018-இலிருந்து நடைபெறாத நிலையில், அமைச்சா் நிா்மலா சீதாராமனின் பயணத்தையொட்டி அக்.30 முதல் நவ.1 வரை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சரக்குகள், சேவைகள், சுங்க வரி விதிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணை இயக்குநா் ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 அதிகாரிகள் அடங்கிய குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/obamakamala_1721994475.jpg)
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” - ஒபாமா ஆதரவு
வெள்ளி 26, ஜூலை 2024 5:16:46 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/srilankaelectioncommis_1721991321.jpg)
இலங்கையில் செப்டம்பர் 21ல் அதிபர் தேர்தல் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூலை 2024 4:23:57 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/colombiapolice_1721973652.jpg)
கால்பந்து மைதானம் மீது கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி!
வெள்ளி 26, ஜூலை 2024 11:29:04 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/sarathfonseka_1721891753.jpg)
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சரத் பொன்சேகா அறிவிப்பு
வியாழன் 25, ஜூலை 2024 12:45:57 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/boatsink_1721891502.jpg)
அர்ஜென்டினாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஆராய்ச்சியாளர்கள் உள்பட 8 பேர் பலி!
வியாழன் 25, ஜூலை 2024 12:40:02 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/trump_secret_1721821755.jpg)
டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலி: அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் ராஜினாமா
புதன் 24, ஜூலை 2024 5:18:16 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/nepalflighti34i_1721815731.jpg)