» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர் மரணம்
ஞாயிறு 15, அக்டோபர் 2023 3:37:03 PM (IST)
இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய கவித்துவமான, தனித்துவமான படைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். புலிட்சர் விருது, அமெரிக்காவின் புத்தக விருது, புத்தக விமர்சனங்கள் விருது உள்ளிட்டவற்றை வென்றவர். அமெரிக்க நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்தவர். இவரின் இலக்கிய சேவையை பாராட்டி கடந்த 2020-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.நாட்டில் உள்ள பெரும்பாலான இலக்கிய விருதுகளுக்கு சொந்தகாரர்.லூயிஸ் க்ளுக் மாசாசூட்ஸ் மாகாணம் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் புற்றுநோய் காரணமாக அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 80. சிலமாதங்களுக்கு முன்பு தன் உடலில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் தத்துவங்கள், கசப்பான நினைவுகள், மரபுசார் குறிப்புகள், சமகால நிகழ்வுகள், டார்க்-காமெடி ஆகியவற்றை கொண்டது. நன்கொடையாளரும், மனிதநேயம் மிகுந்தவரும், ஆசிரியருமான லூயிஸ் க்ளுக்கின் மரணம் இலக்கியவாதிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










