» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் தொடங்கியது!
வியாழன் 1, ஜூன் 2023 4:40:58 PM (IST)
இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தலைவர்கள் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதன்பின்பு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள், பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசண்டா முன்னிலையில் நடைபெற்றன. இதுபற்றி பிரதமர் மோடி ஊடகங்களின் முன் பேசும்போது, போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டு உள்ளன. மக்களின் இணைப்பை அதிகரிக்க புதிய ரயில் வழிகளை நாம் நிறுவியுள்ளோம்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகால மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது நமது நாடுகளின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரும். இரு நாடுகள் இடையேயான மதம் மற்றும் கலாசார உறவுகள் மிக பழமையானது மற்றும் வலிமையானது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ராமாயண பாதை தொடர்புடைய திட்டங்களை விரைவுப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என பேசியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்: கிம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:42:02 PM (IST)

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:21:48 PM (IST)

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் பலி!
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:44:18 AM (IST)

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:41:26 AM (IST)

ஹர்தீப் கொலை பற்றி என்னிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
புதன் 27, செப்டம்பர் 2023 9:55:47 AM (IST)

ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)
