» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)

வட கொரியா நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், தனது இராணுவ திறன்களை அதிகரிக்க முதல் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ராக்கெட் கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அதன் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களை பிரித்ததைத் தொடர்ந்து, உந்துதலை இழந்த காரணத்தால், நடுவானில் வெடித்து கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோல்விக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகவும் அது கூறியுள்ளது. வட கொரியாவின் முக்கிய விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ள வடமேற்கு டோங்சாங்-ரி பகுதியில் இருந்து காலை 6:30 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. இதனால், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், எந்த ஆபத்தும் அல்லது சேதமும் ஏற்படாததால் எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:46:15 PM (IST)

அகதிகளை ஏற்காவிட்டால் ஜோர்டான், எகிப்து நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தப்படும் : டிரம்ப்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:28:10 AM (IST)

மெக்சிகோவில் லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 41 பேர் உயிரிழப்பு
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:19:55 AM (IST)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!
சனி 8, பிப்ரவரி 2025 10:40:08 AM (IST)

அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகல்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு சூறை
வியாழன் 6, பிப்ரவரி 2025 10:21:45 AM (IST)
