» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர்களை பணியாற்ற விடாமல் தடுக்கு தாலிபான்கள்!

வெள்ளி 20, ஆகஸ்ட் 2021 3:35:30 PM (IST)



ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர்களை பணியாற்ற விடாமல் தலீபான்கள் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. எனினும், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன.  இதேபோன்று அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில், ஷரியா சட்டத்துடன் ஒத்து போகும் வகையில், பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான் பயங்கரவாதிககள் தெரிவித்தனர். ஆனால், எங்களை பணியாற்ற விடாமல் தலீபான்கள் தடுக்கின்றனர் என பெண் நிருபர்கள் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ஷப்னம் கான் தவ்ரான் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கூறும்போது, என்னை பணி செய்ய தலீபான்கள் அலுவலகத்திற்குள்ளேயே விடவில்லை. நான் பணியாற்ற விரும்புகிறேன்.  ஆனால், ஆட்சி மாறிவிட்டது.  அதனால் நீ பணியாற்ற முடியாது என கூறுகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று பெண் பத்திரிகையாளர் கதீஜாவும், தன்னை பணியாற்ற விடாமல் தலீபான்கள் தடுக்கின்றனர்.  எங்களுடைய சக பணியாளர்களையும் தடுத்தனர் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory