» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேட்டி
வியாழன் 6, மார்ச் 2025 12:38:03 PM (IST)
உ.பி., பிகாரில் மக்கள்தொகை அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தான், தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான். பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மக்கள் தொகை ஒரு பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அது வரவேற்கத்தக்க அறிகுறியாக தான் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் முக்கியம் தான். ஆனால் நமக்குத் தேவையானது மக்கள்தொகை மேலாண்மை தான்.
மக்கள்தொகை பலன்களில் மிகப்பெரிய நன்மையை பெறும் ஒரு நாடு இந்தியா. மக்கள்தொகை மேலாண்மை மூலம் மக்கள்தொகை பலன்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய நாயுடு, எதிர்காலத்திற்கான மக்கள்தொகைப் பலன்களை நாம் நிர்வகிப்பதன் மூலம் "இந்தியாவும் இந்தியர்களும் சிறந்தவர்களாக இருப்பார்கள்" என்றார்.
உலகளாவிய சமூகங்கள் தங்களுக்கான சேவைகளுக்காக இந்தியர்களான நம்மையைச் சார்ந்துள்ளன. இது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல. தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று நாயுடு வலியுறுத்தினார். மேலும் மக்களவைத் தொகுதி சீரமைப்பு தொடர்பாகவோ, அதனை எப்படி கணக்கிடுவது என்பது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அனுமானங்கள் குறித்து கருத்து செல்ல முடியாது என்றார்.
மும்மொழிக் கொள்கை குறித்து நாயுடு கூறுகையில், "இப்போதெல்லாம், உலகளாவிய வாய்ப்புகளுக்காக அனைவரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்களை நிறுவுவது குறித்து ஊக்குவிக்கப் போகிறேன்" என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல் படுத்தப்படாது: முதல்வர் மமதா பானர்ஜி உறுதி
புதன் 9, ஏப்ரல் 2025 5:05:57 PM (IST)

அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் : ரகுராம் ராஜன் விளக்கம்!
புதன் 9, ஏப்ரல் 2025 11:52:35 AM (IST)

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 11:23:07 AM (IST)

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு : பினராயி விஜயன் வரவேற்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:39:11 PM (IST)

மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:56:59 AM (IST)

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 7 பேர் உயிரிழப்பு: போலி டாக்டர் கைது!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:09:54 AM (IST)
