» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை நியமனம் : பிரதமர் பெருமிதம்!

செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:27:34 PM (IST)

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய அரசு வேலைக்கான நியமன கடிதங்களை, 51 ஆயிரம் பேருக்கு இன்று(அக்.,29) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அரசின் கொள்கைகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகின்றன. ஹரியானாவில் பா.ஜ., அரசுக்கு என தனி அடையாளம் உள்ளது. ஹரியானாவில் புதிய அரசு அமைந்ததும் 26 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த செலவும் இல்லாமல் அரசு வேலை கிடைத்துள்ளது. குறிப்பாக, பணிநியமன ஆணை பெற்ற, ஹரியானா மாநில இளைஞர்களை வாழ்த்துகிறேன்.

இந்த பண்டிகை காலக்கட்டத்தில், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டே நாட்களில், தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிரமாண்ட கோவிலில் ராமர் அமர்ந்திருக்கிறார். அவரது பிரமாண்டமான கோவிலில் கொண்டாடப்படும் முதல் தீபாவளியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory