தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தூத்துக்குடி நகர்புற வட்டார வள மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.