» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு - வி.கே.சசிகலா நம்பிக்கை

திங்கள் 11, செப்டம்பர் 2023 10:41:55 AM (IST)

வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும் என்று வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ள மொளச்சூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் வி.கே.சசிகலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கினார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியது: வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தான் திமுகவினர் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். அரசு அதிகாரிகளுக்கு மாதம் சம்பளம் வழங்கவே அரசிடம் போதுமான நிதி இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிருக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்குவது எந்த விதத்தில் சாத்தியமாகும். மேலும் தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஜெ . ரசிகர்கள்Sep 12, 2023 - 03:52:08 PM | Posted IP 172.7*****

ஜெ வின் புகழை கெடுத்தவர். தமிழ்நாட்டில் ஊழலுக்கு பெயர் போனவர் ..இவர் ஏமாற்று பேர்வழி, இவரெல்லாம் நாட்டை பற்றி தேர்தலைப்பற்றி பேசுகிறார் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory