» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
திங்கள் 22, செப்டம்பர் 2025 5:23:09 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வருகிற நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி. எஸ். ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். சிவில் துறைத் தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமிற்கு கல்லூரி துறைத்தலைவர்கள் சோபியா பிரபாகர், பெனிட்டா ராஜு, சிவமுருகன், ஜான் வெஸ்லி, பிரபாகர் வேத சிரோமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேஸ் தலைமையில், தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், உடையார் குளம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் தூத்துக்குடி ரத்த வங்கி ஊழியர்கள சிறப்பாக நடத்தினர். இதில் 55 மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிறைவாக கல்லூரி பர்சார் தனபால் நன்றியுரை நிகழ்த்தினார்.
இம் முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாக செயலாளருமா ன நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


