» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:36:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார்.
இந்த விருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். ஆசியை வனிதாவுக்கு கருங்குளம் புனித வளன் துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து பாராட்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜாக்சன் தலைமை வகித்தார் வாழ்த்தினார்.
ஆசிரியை ஜெயமேரி வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியை வனிதா தனக்கு அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை பள்ளி வளர்ச்சிக்காக தாளார் ஜாக்சன் அவர்களிடம் ஒப்படைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியை பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

