» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நீட் தேர்வில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவர் சாதனை
சனி 26, ஜூலை 2025 8:32:59 AM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்று திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் - விஜயரதி தம்பதி மகன் செல்வ சதீஷ். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு எழுதினார். அதில் 720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தார். அவருக்கு, திருச்செந்தூர் அரசுப் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், மேலாண்மைக் குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

