» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நீட் தேர்வில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவர் சாதனை
சனி 26, ஜூலை 2025 8:32:59 AM (IST)

நீட் தேர்வில் வெற்றி பெற்று திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் - விஜயரதி தம்பதி மகன் செல்வ சதீஷ். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்கு எழுதினார். அதில் 720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தார். அவருக்கு, திருச்செந்தூர் அரசுப் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், மேலாண்மைக் குழு தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


