» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா
வியாழன் 10, ஜூலை 2025 12:14:19 PM (IST)

தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயசண்முகம் தனது உரையில் குருபூர்ணிமா என்பது ஆடிமாத பௌர்ணமி நாளில் மகரிஷி வேத வியாசர் அவதரித்த நாள் என்றும், இவரே நான்கு வேதங்களையும் எழுதியவர் என்றும் கூறினார். தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும் உலகில் மிகமிக உயர்வானது.
எனவே மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை கூர்மையாக கவனித்து, அதைப் பதிவாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம். எனவே ஆசிரியைகளுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்களோடு வாழ்க்கையில் நம் இலட்சியத்தை அடைய உறுதி கொள்வோம் என்று வாழ்த்தி பேசினார்.
அதன்பின் மாணவ, மாணவியர்கள் பூக்களை சமர்ப்பித்து ஆசிரியைகளை வணங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் பூத்தூவி மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

