» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா

செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடி மாப்பிள்ளையூரனியில் அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது. 
                
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி ஊராட்சியில், அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் 10 ஆம்  வகுப்பு மற்றும் 11 மற்றும் 12  ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து 5வது ஆண்டாக இலவச நோட்டு வழங்கும் விழா மாதா நகரில் நற்பணி மன்ற பொறுப்பாளர் தொம்மை அந்தோணி தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் மாவட்ட வழக்கறிஞர் மோகன் தாஸ், அரசு மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கி சிறப்புரை ஆற்றினர். முன்னதாக மன்ற நிர்வாகி விமல் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மன்ற நிர்வாகி வினோ நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் அழகர், முத்து, மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory