» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா

வெள்ளி 2, மே 2025 8:29:57 PM (IST)



நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 51- ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 51- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிற் பள்ளி வளாகத்தில் உள்ள கிறிஸ்து சிற்றாலயத்தில் சிறப்பு திருவிருந்து ஆராதனையை குருவானவர் செல்வராஜ் நடத்தினார். சபை ஊழியர் ஸ்டான்லி வேதபாடம் வாசித்தார். கைத்தொழில் பாடசாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஆரோன் ஜெயசிங் தேவ செய்தி அளித்தார்.

பின்னர் நடைபெற்ற ஆண்டு விழா பொதுக்குழு கூட்டத்திற்கு ஆரம்பமாக ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கராஜ் ஜெபம் செய்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி அனைவரையும் வரவேற்றார். செயலாளர் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளியின் முன்னாள் கண்காணிப்பாளர் ஆரோன் ஜெயசிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் முதல் முறையாக பங்கேற்ற மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பெற்றனர். நிறைவாக முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஜோசப் நன்றி கூறினார்.

விழாவில் நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி முதல்வர்(பொறுப்பு)  ஜாண்சன், தொழிற்பயிற்சி மைய மேலாளர் ஜோயல் ஜெயக்குமார் உட்பட முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தாளாளர் வக்கீல் பிரபாகர் ஆலோசனையின் பேரில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory