» சினிமா » செய்திகள்

மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன் : அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி!

திங்கள் 20, பிப்ரவரி 2023 11:12:18 AM (IST)

எனது நெடுங்கால நண்பர் மயில்சாமியின் ஆசையை நிறுவேற்றுவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி(57)  திடீா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் என மயில்சாமியின் உடலுக்கு 2ஆவது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனா். 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இன்று மயில்சாமி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். சிவனின் அதி தீவிர பக்தர் மயில்சாமி. நாங்கள் இருவரும் சந்திக்கும்போது எம்ஜிஆர், சிவன் பற்றி மட்டுமே பேசுவார் மயில்சாமி. கடந்தமுறை மயில்சாமி என்னை போனில் தொடர்பு கொண்டபோது என்னால் பேச இயலவில்லை. 

தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவபெருமான் அழைத்துச் சென்றுவிட்டார். ஒவ்வொருமுறை கார்த்திகை தீபத்தின்போதும் திருவண்ணாமலையில் இருந்து எனக்கு போன் செய்வார். மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு. கேளம்பாக்கம் சிவன் கோயிலில் நான் பால் அபிஷேகம் செய்யும்  மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன். விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பு என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory