» சினிமா » செய்திகள்
செய்வினை வைத்துவிடுவதாக பெண் மிரட்டல்: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் புகார்!
வெள்ளி 26, ஜூலை 2024 4:50:43 PM (IST)
செய்வினை வைத்துவிடுவதாக பெண் மிரட்டல் விடுப்பதாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார்.

சீரியலில்தான் இரு பெண்களால் பிரச்சினை என்றால் இவருக்கு நிஜ வாழ்விலும் ஒரு பெண்ணால் சூனியம் வைக்கும் அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அருள்மிகு அறுபடை முருகன் கோயிலுக்கு நான் சுவாமி தரிசனம் செய்ய சென்றேன். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார்.
இதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அத்துடன் சில நாட்கள் கழித்து அந்த பெண், எனது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார். செல்பி எடுக்க வேண்டும் என்றும் தொந்தரவு தரும் வகையிலும் அடிக்கடி எனக்கு போன் செய்தார், இதனால் நான் அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது அடையார் வீட்டுக்கே வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்துவிட்டு செய்வினை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)
