» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 உலக கோப்பை : வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய‌ ஆப்கான்!

செவ்வாய் 25, ஜூன் 2024 10:57:55 AM (IST)



டி-20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில், வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 1 பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை திர்மானிக்கு மிக முக்கியமாக ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இன்று மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன் மற்றும் ஷகிப் டக் அவுட்டிலும், கேப்டன் ஷண்டோ 5 ரன்களிலும், சவுமியா சர்கார் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.

இதனிடையே 2 முறை மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்கதேசம் 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ஆன லிட்டன் தாஸ் நிலைத்து விளையாடி அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தார். அரை சதம் அடித்து அசத்திய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

முடிவில் 17.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்கதேசம் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. சிறப்பாக பந்து வீசி அசத்திய ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

ஆஸ்திரேலியா வெளியேற்றம்

சூப்பர் 8 சுற்றில் குரூப் 2-ல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் குரூப் 1-ல் இந்தியாவும் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆப்கன் அணி இன்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

வருகின்ற வியாழக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் காலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா, ஆப்கன் அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இரவு 8 மணிக்கு இந்தியா, இங்கிலாந்தும் மோதுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory