» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தமிழ்நாடு பிரீமியர் லீக் ஏலம் : வரலாறு படைத்த சாய் கிஷோர், சஞ்சய் யாதவ்!
வியாழன் 8, பிப்ரவரி 2024 3:51:34 PM (IST)
தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமையை சாய் கிஷோரும், சஞ்சய் யாதவும் பெற்றனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 144 வீரர்களின் பெயர்கள் 4 பிரிவுகளில் இடம் பெற்றிருந்தது. இதில் இருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தனர்.
இந்த வகையில் மொத்தம் 61 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சாய் கிஷோரை ரூ.22 லட்சத்துக்கும், இடது கை வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை ரூ.11.25 லட்சத்துக்கும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலம் எடுத்தது.ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த மற்றொரு இந்தியப் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியரை ரூ.10.50 லட்சத்துக்கு அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் வாங்கியது.
பி பிரிவில் இடம் பெற்ற ஐபிஎல் நட்சத்திர வீரரும் தமிழ்நாட்டின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவரான சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி ரூ.22 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமையை சாய் கிஷோரும், சஞ்சய் யாதவும் பெற்றனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக ஹரீஷ் குமாரை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ரூ.15.60 லட்சத்துக்கும், அபிஷேக் தன்வாரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரூ.12.20 லட்சத்துக்கும் வாங்கியது. பிசிசிஐ மற்றும் ஐசிசி முன்னாள் தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் ஏலத்திற்கு வருகை தந்து அனைவருக்கும் உற்சாகம் அளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூ ஆணியை வீழ்த்தியது பஞ்சாப்: அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!
சனி 19, ஏப்ரல் 2025 10:59:07 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங்..? வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:35:40 PM (IST)

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
புதன் 16, ஏப்ரல் 2025 12:36:11 PM (IST)

ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:32:06 PM (IST)

இனி பேட் அளவு கண்காணிக்கப்படும் : பிசிசிஐ அறிவிப்பு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:20:47 PM (IST)
