» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு செப்.,8ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயகுமார், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோர், தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுக.,விலிருந்து தவெக,வில் இணைந்தனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
ஜூலை 31ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 5 தொகுதிகளுக்கும் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்தது. தேர்தல் கமிஷன், ஒன்றிய அரசு, சட்டசபை செயலர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர், பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் விதித்த தடை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிக்கப்படுமா? அல்லது தடையை நீக்கி தேர்தல் நடத்துவதற்கான அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கு செப்.,8ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்ற தவெக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிலாடி நபி: மதுபானக்கடைகள்,பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன் : தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:47:57 PM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)








