» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
வெள்ளி 17, ஜூலை 2026 3:27:42 PM (IST)

விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜயின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெண்டர்களைக் கோரி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வறிவிப்பின்படி உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்களும், கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்களும், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த டெண்டர்கள் அனைத்தும் நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்புப் பணி, வாரச்சந்தை கடைகள் ஏலம் மற்றும் புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் தொடர்புடையவை ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)








