» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)
நெல்லை அருகே பத்தமடையில் நிலப்பிரச்சினை காரணமாகக் காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துள்ளார். பலத்த தீக்காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பத்தமடை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). தச்சுத் தொழிலாளியான இவருக்கும், இவருடைய அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வழிபாதை நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நிலப்பிரச்சினை காரணமாகக் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த சீனிவாசன், நேற்று காலையில் பத்தமடை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். காவல் நிலையத்தின் முன்புறம் வந்த அவர், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்துத் தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
தீப்பற்றி உடல் எறிந்த நிலையில் அலறியபடி அவர் காவல் நிலையத்திற்குள் ஓடியுள்ளார். அங்கிருந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துக் காப்பாற்றினர். இச்சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்த சீனிவாசனை மீட்ட போலீசார், உடனடியாகச் சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துப் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலப்பிரச்சினை மற்றும் தற்கொலை முயற்சி குறித் துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)








