» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

மார்த்தாண்டத்தில் சாலையில் கிடந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சூரிய பிரசாத், சாலையில் நடந்து சென்றபோது அங்குப் பெருமளவிலான பணப் பை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். அதை எடுத்துத் திறந்து பார்த்தபோது அதில் 60 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
உடனடியாக அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்ற மாணவன், சம்பவம் குறித்துத் தனது தாய் அம்பிளியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரோ, "அடுத்தவர் உழைப்பில் வந்த பணம் நமக்குத் தேவை இல்லை, அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தாயின் அறிவுரையை ஏற்ற மாணவன் சூரிய பிரசாத், உடனடியாக நகராட்சி கவுன்சிலர் விஜுவுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்குச் சப் இன்ஸ்பெக்டர் இந்திரசுடனை நேரில் சந்தித்து, சாலையில் கண்டெடுத்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அப்படியே பத்திரமாக ஒப்படைத்தார்.
ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையிலும் மாணவன் மற்றும் அவரது தாயின் இந்த நேர்மையான குணத்தைப் பாராட்டிய சப் இன்ஸ்பெக்டர் இந்திரசுடன், மாணவன் சூரிய பிரசாத்திற்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த நேர்மைச் செயல் குறித்த தகவல் பரவியதை அடுத்து, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களிடையேயும் அந்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே, அந்தப் பணத்தைத் தவறவிட்ட நபர் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை: முதல்வர் விஜய் விளக்கம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:54:24 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 15 முதல் தொடக்கம்: ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:22:37 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு: ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:44:57 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)








