» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!

சனி 9, மே 2026 4:08:42 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தப்படுவது முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கனிம வளக் கடத்தலைக் கட்டுப்படுத்த மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து எஸ்பி ஸ்டாலின் கூறியதாவது: கேரளாவுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திற்குள் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே கனிம வளங்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் விதிகளுக்குப் புறம்பாகக் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட இந்த லாரிகளை நிரந்தரமாக அரசுடமையாக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அனுமதியின்றி கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடத்தலில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory