» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : மனமுருகி வழிபட்டார்

புதன் 29, ஏப்ரல் 2026 4:06:53 PM (IST)



தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு வழங்கியது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விஜய் தீவிரப் பரப்புரை மேற்கொண்டார்.

வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், விஜய் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற விஜய், அங்கிருந்து கார் மூலம் ஷீரடி சாய் பாபா கோயிலுக்குச் சென்றார். கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தபோது, அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவரைப் பார்க்கக் திரண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory