» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி தெரிவித்தார்.
நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர். காந்தி, தொகுதியின் முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எம்.ஆர். காந்தி கூறியதாவது: "நாகர்கோவில் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே எனது முதன்மையான நோக்கம்.
இத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசின் உதவியுடன், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாகர்கோவிலில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இத்திட்டத்தின் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். தொகுதியின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அப்போது அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)

பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு: நீதித்துறைக்கே இழுக்கு - காங். எம்பி சுதா கடும் கண்டனம்
புதன் 29, ஏப்ரல் 2026 4:23:21 PM (IST)

ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : மனமுருகி வழிபட்டார்
புதன் 29, ஏப்ரல் 2026 4:06:53 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
புதன் 29, ஏப்ரல் 2026 3:54:51 PM (IST)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)









