» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)
சென்னை மயிலாப்பூரில் உள்ள அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப். 13) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனம் மற்றும் வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சோதனை நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் ஒப்புதல்!
செவ்வாய் 19, மே 2026 3:30:45 PM (IST)

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)

மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் கொலை! கடத்தல் நாடகமாடிய 2 நண்பர்கள் கைது!
செவ்வாய் 19, மே 2026 10:38:05 AM (IST)

தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து ஊழியர் பலி - 5 பேர் படுகாயம்!!
செவ்வாய் 19, மே 2026 10:28:44 AM (IST)

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவு: நகராட்சி பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி!
திங்கள் 18, மே 2026 8:20:54 PM (IST)










