» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)
திருநெல்வேலி பேட்டையில் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி, நகை மற்றும் பணத்தைப் பறித்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (44). இவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காகச் சில நாட்களுக்கு முன்பு இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது, சமூக வலைதளச் செயலி (Mobile App) மூலம் வெங்கடாசலத்தைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி, பேட்டை மில்கேட் பகுதிக்கு வெங்கடாசலம் சென்றுள்ளார். அங்கிருந்த ஓர் இளைஞர், வெங்கடாசலத்தைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆள்நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் மற்றொரு இளைஞரையும் அவர்கள் தங்களோடு இணைத்துக்கொண்டனர்.
காட்டுப்பகுதிக்குச் சென்றதும், அந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து வெங்கடாசலத்தை மிரட்டத் தொடங்கினர். அவரிடமிருந்த 5 கிராம் தங்க மோதிரத்தைப் பறித்ததோடு, கூகுள் பே (Google Pay) செயலி வழியாக 20 ஆயிரம் ரூபாயையும் வலுக்கட்டாயமாகப் பறித்தனர். பின்னர் வெங்கடாசலத்தின் செல்போனையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட வெங்கடாசலம் இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பேட்டை கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் சக்தி சுரேஷ் (23) மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துமாலை மகன் இசக்கி ராஜா (19) ஆகிய இருவரும் இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சக்தி சுரேஷ் மற்றும் இசக்கி ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை; வதந்திகளை நம்பாதீர்: தவெக திட்டவட்டம்!
திங்கள் 16, மார்ச் 2026 4:01:58 PM (IST)

பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள்: சட்டம் ஒழுங்கு சீரழிவு - பாஜக விமர்சனம்!
திங்கள் 16, மார்ச் 2026 3:57:30 PM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்ட்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)








