» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேவர் நினைவு மண்டபம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு : நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஞாயிறு 1, மார்ச் 2026 1:47:59 PM (IST)

முத்துராமலிங்கத் தேவர் நினைவு மண்டபம் மீது, மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, திம்மராஜபுரத்தில், முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துடன் கூடிய சிறிய நினைவு மண்டபம் உள்ளது. நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள், மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதில், கண்ணாடி உடைந்து, மண்டபத்தின் உள்பகுதி தீயில் கருகியது. நேற்று காலை, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அரசு பஸ்சை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு, ' தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீரழிந்திருப்பது வெட்கக்கேடானது. அரசு உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்,' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory