» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 3:31:53 PM (IST)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி வெதர்மேன் ராஜா சமூக வலைளத்தில் வெளியிட்ட பதிவில்: ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு மிக சாதகமாக உள்ளது. இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
குறிப்பாக இராமநாதபுரம், இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாம்பன் தனுஷ்கோடி மண்டபம் வைப்பார், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நெல்லை தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மாலை இரவு நேரங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அம்பாசமுத்திரம் விகேபுதூர் ஆலங்குளம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ஆகிய தாலுகாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









