» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:56:27 AM (IST)
2026-ம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு அட்டவணையை வெளியிட்டு அதன்படி, பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதும், தேர்வுகளை நடத்துவதுமான நடவடிக்கைகளை எடுக்கிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை https://tnpsc.gov.in/english/annual-planner.html என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 20-ம்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 3-ம்தேதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ம்தேதியும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 11-ம்தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25-ம்தேதி தேர்வு நடத்தப்படும். அதிகம் பேர் விண்ணப்பிக்கக் கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ம்தேதி வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20-ம்தேதி நடத்தப்பட உள்ளது. இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பு வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









