» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிட்வா புயல் சென்னையை நெருங்கும் கரையைக் கடக்காது: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சனி 29, நவம்பர் 2025 5:38:36 PM (IST)



டிட்வா புயலாகவே சென்னையை நெருங்கும். கரையைக் கடக்காது. கடலோரத்தை ஒட்டி செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வங்ககடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் தூரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. சென்னைக்கு 350 கி.மீட்டர் தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு 150 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும் டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோரத்தை ஒட்டி செல்லும். டிட்வா புயலாகவே சென்னையை நெருங்கும். கரையைக் கடக்காது. கடலோரத்தை ஒட்டி செல்லும்” என்றார். இதற்கு முன்பு டிட்வா புயல் சென்னையை நெருங்கும் போது தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என முன்பு கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது புயலாகவே தென்மேற்கு வங்க கடலை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory