» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் தொடர் மழையால் மூழ்கிய பயிர்கள் : லட்சக்கணக்கில் சேதம் - விவசாயிகள் வேதனை!

சனி 29, நவம்பர் 2025 4:15:15 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் 150 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory