» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற பெயரில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டம் பிரத்தியோகமாக பெண் தொழில் முனைவோர்களுக்காகவே தமிழ்நாடு அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்; கீழ் நேரடி விவசாயம் / பண்ணை சார்ந்த தொழில்கள் தவிர அனைத்து வியாபாரம், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு 25மூ மானியத்துடன் வங்கி கடனுதவி பெற பெண் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10.00 இலட்சம் ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.2.00 இலட்சம். சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5மூ ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெற புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, சாதி சான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் https://msmeonline.tn.gov.in/twees/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு நாகர்கோவில், கோணம், தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 04652 260008 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம். பெண் தொழில் முனைவோர்கள் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தொழில் செய்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)









