» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!
சனி 29, மார்ச் 2025 11:46:22 AM (IST)
"தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "கடந்த ஆண்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மதிப்போடும், உரிமையோடும், சுயமரியாதையுடனும் நாம் இருக்க பெரியாரும், அம்பேத்கருமே காரணம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் 6% குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான நிதியில் இருந்து கல்விக்கு மட்டும் 71.31% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எளிதில் கல்வி பெற கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமமான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் அமலாக்கத்துறை விசாரணை வழக்கு ஏப்.8-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:50:50 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் பழைய நடைமுறைகள் தொடர வேண்டும்: வைகோ
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:13:10 PM (IST)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:52:35 PM (IST)

பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு ஒரு சதவீத கட்டண குறைப்பு: இன்று முதல் அமல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:39:31 PM (IST)
