» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் ஆட்சியர் சுகுமார்ஆய்வு
வெள்ளி 28, மார்ச் 2025 12:51:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 23647 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஸ்ரீநித்தியகல்யாணசுந்தரி வெள்ளையன் செட்டியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (28.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. 94 தேர்வு மையங்களில் 93 அரசுப் பள்ளிகளும், 81 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 110 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளிருந்தும் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், சிறை கைதிகள் ஒரு தனித்தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 325 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
95 தேர்வு மையங்களில் 11,208 பள்ளி மாணவர்களும், 11,721 மாணவியர்களும், 718 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23647 பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு பணிக்கு 95 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 101 துறை அலுவலர்கள், 1507 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1703 ஆசிரியர்களும், தேர்வினை கண்காணிக்க 147 பேர் நிலையான படையினராகவும், சிறப்பு பறக்கும் படை 7 குழுக்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆய்வில், இராதாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாட்கோ மூலமாக விவேஷியஸ் அகடாமியில் பயிற்சி: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:48:33 PM (IST)

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)

பங்குனி உத்திர விழா எதிரொலி : குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:31:16 PM (IST)

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:18:58 PM (IST)

தமிழில் பாடங்கள் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித் துறை திட்டம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:58:45 AM (IST)

சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் கேட்டு தொந்தரவு : கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:04:33 AM (IST)
