» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல்: பண்டிகை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்!

திங்கள் 13, ஜனவரி 2025 12:10:25 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து 13-ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, மத்திய திருவனந்தபுரம், வழியாக திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) அடுத்த நாள் பிற்பகல் 2.00 மணிக்கு சென்றடையும். ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory